ETV Bharat / city

'எப்படியாவது விரைவாக உதவி பண்ணுங்க' - உக்ரைனில் தவிக்கும் உசிலம்பட்டி மாணவர்கள் உருக்கமான வேண்டுகோள்

author img

By

Published : Feb 25, 2022, 8:13 PM IST

உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போர்ச்சூழல் காரணமாக அங்கே தவிக்கும் உசிலம்பட்டியைச் சேர்ந்த மாணவர்களை மீட்டு பாதுகாப்புடன் அழைத்துவர பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உக்ரைனில் தவிக்கும் உசிலம்பட்டி மாணவர்கள்
உக்ரைனில் தவிக்கும் உசிலம்பட்டி மாணவர்கள்

மதுரை: உசிலம்பட்டியைச் சேர்ந்த ஆதிசிவன் என்பவரின் மகன் கபில்நாத், உக்ரைன் நாட்டின் கீவ் பகுதியிலும் சௌந்தரபாண்டியன் என்பவரின் மகன் தீபன் சக்கரவர்த்தி உஸ்குரோத் பகுதிகளும் மருத்துவப் படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களைப் போன்றே உசிலம்பட்டியைச் சேர்ந்த மேலும், பலர் அங்கே மருத்துவப் படிப்பில் சேர்ந்து பயின்று வருகின்றனர். தங்களது பிள்ளைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உக்ரைன் நாட்டிலிருந்து மீட்டு பத்திரமாக தமிழ்நாடு கொண்டுவர வேண்டுமென இருவரின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உக்ரைனில் தவிக்கும் உசிலம்பட்டி மாணவர்கள்

அங்கு நிலவும் பதற்றம் காரணமாக தங்களது சொந்த ஊர் திரும்ப விமான டிக்கெட் எடுத்து இருந்த நிலையிலும், விமானங்கள் ரத்தானதால் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் தவிப்பதாக அம்மாணவர்கள் காணொலி மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: உக்ரைனில் சிக்கித்தவிக்கும் சிவகங்கை மாணவி வெளியிட்ட காணொலி

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.